பொங்கல் சிறப்பு வாழையும் , கரும்பும் …!!

பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில்  ‘கொடாப்பு’ போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல கிராமங்களில்  வீட்டிலே வாழை மரம் உண்டு என்பதால். வாழைத் தாரை யாரும் கடையில் வாங்குவதில்லை. கடையில் வாங்கிய வாழைத்தாரை தரையில் பள்ளம் தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழைக்காயை வைத்து, மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு … Read more

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்…!!

தைப்பொங்கல் என்பது  தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக    தமிழ்நாடு , இலங்கை , மலேசியா , சிங்கபூர் , ஐரோப்பிய நாடுகள் , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா மொரிசியஸ் என தமிழர் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று உழைக்கும் மக்களின்  இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு ட்விட்டரில் தெரிவித்த பொங்கல் வாழ்த்து…!!

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு” என தனது பதிவிட்டு ட்விட்டரின் மூலமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு. — Kamal Haasan (@ikamalhaasan) January 13, 2018

போகி பண்டிகையையொட்டி சென்னையில் விமானங்கள் ரத்து…!!

போகி பண்டிகையையொட்டி சென்னையில் பொதுமக்கள் அதிகாலையளவில் அதிக அளவிலான பழைய பொருட்களை எரித்ததால் விமான நிலையத்தின் ஓடுபாதை முழுவதும் புகைமண்டலமாக சூழ்ந்துள்ளது. இதனால்,சென்னை விமானநிலையத்தில் 12 விமானங்கள் தரையிரங்க முடியாமல் பெங்களூரு உள்ளிட்ட 4 இடங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன.மேலும் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம் பனியோடு புகைசூழ்ந்தது…!!

பொங்கல் விழாவின் தொடக்கமான போகி பண்டிகையையொட்டி, அதிகாலையிலேயே எழுந்து மக்கள் தங்கள் வீட்டில்உள்ள பழைய பொருட்களை கொளுத்தி கொண்டாடி வருகின்றனர். இதனால் சென்னையில் பனியோடு புகைசூழ்ந்து காணப்படுகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்வதுகூட தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது

புதுச்சேரியில் இன்று முதல் பொங்கல் பொருட்கள் விநியோகம்…!!

புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பொருட்கள் விநியோக்கிக்கப்படும் எனவும்,இந்த பொங்கல் பொருள்களில் 250 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள்- விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை தான் என்ன…??

  விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.இந்நிலையில் அமெரிக்காவில் பொங்கல் பண்டிகையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, அமெரிக்கா அதிபர் ட்ரெம்ப் அதை நிறைவேற்றியுள்ளார்.இதை எந்த ஒரு நடிகர்களும் கண்டுக்கொள்ளாத நிலையில் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.     https://twitter.com/iVijayakant/status/949558533913133056 … Read more