நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு!

மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம் தேதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1962-ம் ஆண்டு, நாட்டின் குடியரசுத் தலைவராக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோதுதான், முதல் முறையாக நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட ஆரம்பித்தது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளில், நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து … Read more

தங்கம் வென்ற தங்க தாரகை தாக்கப்பட்ட அவலம் ..!

காமன்வெல்த் விளையாட்டில்  தங்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை பூனம்யாதவ், சொந்த ஊரில் தாக்கப்பட்டார். சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வந்து சேர்ந்த அவர், உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, பக்கத்து வீட்டாருக்கும் பூனம் யாதவின் உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பக்கத்து வீட்டார் கற்களை வீசி தாக்கியதில் பூனம் யாதவும் காயமடைந்தார். பூனம் யாதவ் உறவினருக்கும், அருகே வசிப்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.