புயல் பாதிப்பு: விரைவில் நிவாரணம் – அமைச்சர் அறிவிப்பு

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல். மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், … Read more

சென்னை – புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கம்!

புயல் கரையை கடந்த பின் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவித்திருந்தது போக்குவரத்துத்துறை. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. புயல் கரையை கடந்த பின் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நெற்றி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்ததால், சென்னையில் … Read more

மாண்டஸ் புயல்; காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் 9 கிமீ வேகத்தில் நகர்வு என வானிலை மையம் தகவல். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழிவிலுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வேலூரில் இருந்து 40 கிமீ தொலைவில் நீடிக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 140 … Read more

புயல் பாதிப்புக்கு உதவ தயார்! – உதவி எண் அறிவித்த அண்ணாமலை!

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி எண்ணை அறிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக 300க்கும் மேற்பட்ட மரங்கள், வீடுகள் உள்ளிட்ட  பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜக தொண்டர்கள் தயாராக … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி.! பூங்காக்கள் மூடல்.. 19 விமானங்கள் ரத்து.!

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இன்று 19 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக இன்று விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் 11 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் 8 விமானங்கள் உட்பட 19 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால், முறிந்து மரங்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று ஒருநாள் … Read more

#BREAKING: இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் நகர்வதால் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் வலு குறைந்து உள் மாவட்டங்களில் நகர்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் நகர்வதால் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் … Read more

புயலால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு! சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் – அமைச்சர் அறிவிப்பு

மாண்டஸ் புயலால், தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி. மாண்டஸ் புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு உரிய நிவரப்பினம் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அறிவித்துள்ளார்.  கட்டுமரம் முழுமையாக சேதமானால் ரூ.32 ஆயிரமும், பகுதி சேதமானால் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2 முதல் 3 நாட்களில் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் கூறுகையில், மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் மீட்பு … Read more

#BREAKING: புயல் பாதிப்பு நிலவரம் – முதலமைச்சர் இன்று ஆலோசனை!

புயல் பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை. அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்ற மாண்டஸ் பின்னர் சாதாரண புயலாக வலுவிழந்தது. இதன்பின் நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கி, சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் … Read more

#BREAKING: கள்ளக்குறிச்சியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின் விநியோகம் நிறுத்தப்படும் – மின்வாரியம் அறிவிப்பு!

காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.