அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவர்கள் போராடியதால் பரபரப்பு…!
திருநெல்வேலி:பாவூர்சத்திரத்தில் மாலையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் அரசு பேருந்தைச் சிறைபிடித்துப் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மேலப்பாவூர், திருச்சிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, மேலப்பாட்டாக்குறிச்சி உள்பட பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பேருந்துகளில்தான் பள்ளிக்கு வந்துச் செல்கின்றனர். அரசு வழங்கியுள்ள இலவச பேருந்து பயண அட்டை வைத்துள்ள மாணவர்கள் அதன்மூலம் … Read more