ஜெயலலிதாவிற்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை- மருத்துவர் ஸ்வாமிநாதன்

ஜெயலலிதாவுக்கு தான் சிகிச்சை வழங்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.ஜெ., மரணம் குறித்த விசாரணையில் மருத்துவர் ஸ்வாமிநாதன் இன்று நேரில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து, சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள ஆணைய அலுவலகத்தில், சுவாமிநாதன் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை வழங்கப்பட்ட போது தான் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தது உண்மை தான் என்றும் எனினும், தான் ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெ.,வை மருத்துவமனையில் சந்தித்த நபர்கள் யார்….? குறித்து விசாரணை கமிஷன்

  ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரை யாரெல்லாம் சந்தித்தார்கள் என்ற விபரத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையில் ஜெயலலலிதா சிகிச்சை பெற்ற போது அவரை யாரெல்லாம் சந்தித்துள்ளனர் என்ற தகவலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன் ராவ், … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து 15பேரிடம் விசாரணை: நீதிபதி ஆறுமுகசாமி

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சசிகலா விசாரணை ஆணையத்தில் ஆஜராவது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.