ஜெயலலிதாவிற்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை- மருத்துவர் ஸ்வாமிநாதன்

ஜெயலலிதாவுக்கு தான் சிகிச்சை வழங்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.ஜெ., மரணம் குறித்த விசாரணையில் மருத்துவர் ஸ்வாமிநாதன் இன்று நேரில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து, சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள ஆணைய அலுவலகத்தில், சுவாமிநாதன் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை வழங்கப்பட்ட போது தான் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தது உண்மை தான் என்றும் எனினும், தான் ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment