ஜெ.,வை மருத்துவமனையில் சந்தித்த நபர்கள் யார்….? குறித்து விசாரணை கமிஷன்

 
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரை யாரெல்லாம் சந்தித்தார்கள் என்ற விபரத்தை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையில் ஜெயலலலிதா சிகிச்சை பெற்ற போது அவரை யாரெல்லாம் சந்தித்துள்ளனர் என்ற தகவலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்ததாக ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment