ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இந்நிலையில் தமிழக அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க மறுத்ததோடு, இந்த வழக்கை 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.