மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து – 7 பேர் பலி, 28 பேர் காயம்!

பாகிஸ்தானில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து கீழே விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கராச்சி பகுதியில் இருந்து சாக்வால் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் 7 … Read more

டம்பர் மீது மோதிய பேருந்து : 7 பேர் உயிரிழப்பு; 13 பேர் படுகாயம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் டம்பர் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பிந்த் எனும் மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று டம்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்திற்குள் இருந்த பயணிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த பகுதியில் காவலர்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு … Read more

சோமாலியா விமான நிலையத்தில் கண்ணிவெடி தாக்குதல் – 5 பேர் காயம்!

சோமாலியா நாட்டிலுள்ள புலாபுர்தே நகரில் உள்ள விமான நிலையத்தில் நில கண்ணிவெடி வெடித்ததில் 5 பேர் காயமடைந்துள்ளனர். சோமாலியா நாட்டில் உள்ள ஹிரன் பகுதியில் புலாபுர்தே நகரில் மறுசீரமைப்பு ஏற்படுத்திய விமான நிலையத்தில் நிலக்கண்ணி வெடிகளை அல் ஷபாப் பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த கண்ணி வெடிகள் சில மணி நேரங்களுக்குப் பின்பதாக வெடித்து சிதறியுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையத்திலிருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் முழுவதுமாக சேதம் … Read more

சிமெண்ட் லாரி மீது மோதிய ஜீப் – 8 பேர் உயிரிழப்பு ; 6 பேர் காயம்!

கர்நாடகாவில் சிமெண்ட் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர்.  கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாபூர் என்னும் மாவட்டத்தில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மற்றும் எதிரே வந்த ஜீப் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் அதிவேகமாக வந்த ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. 6 … Read more

ஓடிக்கொண்டிருந்த பொழுது திடீரென தீ பிடித்த வேன் – 9 பேர் காயம்..!

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள வேன் ஒன்று பயணம் செய்து கொண்டிருந்த பொழுதே தீ பிடித்து இருந்துள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ்-அயோத்தி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு திரும்பிய பொழுது வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த வேனில் இருந்த பயணிகள் பலர் இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் லக்னோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீக்காயமடைந்தவர்களில் 8 பேர் பெண்கள் … Read more

சவுதி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் – 8 பேர் காயம்!

சவுதி அரேபியா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.  ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்  , ஏமன் நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரான் ஆதரித்து வருகிறது. மேலும்,  ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுவரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான … Read more

பால்கனி இடிந்து விழுந்து விபத்து – 8 மாத குழந்தை பலி: 2 பேர் காயம்!

காசியாபாத் பகுதியில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.  உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத்  கோடா மகாலட்சுமி காலனியில் வசித்து வரக்கூடிய பெண் ஒருவர் தனது சகோதரர் வீட்டிற்கு ரக்ஷாபந்தன் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மழை பெய்ததால் அந்த பெண் தனது 8 மாத குழந்தை மற்றும் அவரது தாயாருடன் பால்கனியின் கீழ் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது இந்த பால்கனி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் … Read more

துருக்கியில் பேருந்து விபத்து – 14 பேர் பலி, 18 பேர் காயம்!

துருக்கியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துருக்கி நாட்டின் பாலிகேசிா் மாகாண நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திடீரென சாலையோர சரிவில் பேருந்து உருண்டு விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் இருந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

ஒடிசாவில் எம்.எல்.ஏ வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளது – 4 பேர் காயம்!

ஒடிசாவில் உள்ள எம்.எல்.ஏவின் இரு வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் ஆளும் பிஜேடி எம்எல்ஏ சூரிய மணி பைத்யா அவர்களின் இரு வீடுகள் மீது கச்சா வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சி ஆதரவாளர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கேஷபூர் கிராமத்தில் உள்ள பதனா சாஹி, சட்டமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு மற்றும் நிர்மல்ஜாரில் உள்ள அவரது வாடகை வீடு … Read more

மத்திய பிரதேசத்தில் சிறை இடிந்து விழுந்து விபத்து – 22 கைதிகள் காயம்!

மத்திய பிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறை இடிந்து  விழுந்ததில், 22 கைதிகள் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் எனும் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் இந்த சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்து, சிறையில் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிறையில் இருந்த 22 கைதிகள் காயமடைந்துள்ளனர். அதில் ஒரு கைதி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை … Read more