தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் கிளை தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. மேலும், இந்த புயல் காரணமாக … Read more

#Justnow : திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! எங்கு? எதற்கு?

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்கள் விடுமுறை.  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி   கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ  10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை, வேங்கிக்கால் ஏரிக்கரை, … Read more

இன்று சீர்காழி வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சீர்காழி வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.   சீர்காழி வட்டத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை சீர்காழி வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சீர்காழி வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.   சீர்காழி வட்டத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். கனமழை பெய்ததால் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை..!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை – எந்த மாவட்டத்தில் எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா..?

கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் … Read more

டெல்லியில் நாளை முதல் தொடக்க பள்ளிகளை திறக்க உத்தரவு..!

டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் நாளை முதல் தொடக்க பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5-ஆம் தேதி முதல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் காற்றின் தரம் … Read more

மழைக்கான விடுமுறைகள் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்

மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழைக்காரணமாக பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் … Read more

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

புதுச்சேரி காரைக்காலில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.