#Breaking:அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்த மழை,வெள்ளம் – சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை:தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்றும்,அதை முறையாகக் கற்று அடுத்தடுத்த மழைக் காலங்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதி நாள் தண்ணீருக்காகவும்,மீதி நாட்கள் தண்ணீரிலும் தவிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும்,சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற … Read more

தாம்பரத்தில் மழை,வெள்ள பாதிப்பு-மீட்பு பணிக்காக 8 அதிகாரிகள் நியமனம்!

தாம்பரம்:மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 8 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனையடுத்து,மீண்டும் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி … Read more

வெனிசுலா நாட்டில் வெள்ளம் : 20 பேர் உயிரிழப்பு!

வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். தென் ஆப்பிரிக்க நாடான வெனிசுலா நாட்டில் உள்ள மரிடா எனும் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும், வீடுகள் மற்றும் சாலைகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

துருக்கி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு..!

துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், பாலம் உள்ளிட்டவை இடிந்து விழுந்துள்ளது. இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2,250க்கும் மேற்பட்ட … Read more

துருக்கி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!

துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த புதன்கிழமை அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், பாலம் உள்ளிட்டவை இடிந்து விழுந்துள்ளது. இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 1,700க்கும் மேற்பட்ட மக்களை … Read more

ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் வெள்ளம் : 6 பேர் உயிரிழப்பு, 40 பேர் மாயம்!

ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் பகுதியில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஹென்சார் கிராமத்தில் நேற்று அதிகாலை திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு மேகமூட்டமாக காணப்பட்டதால், வெள்ளத்தில் 40க்கு மேற்பட்ட மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்து, சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த கிராமத்திற்கு … Read more

மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளபாதிப்பால் உயரும் பலி எண்ணிக்கை..!-251 ஆக அதிகரிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 251 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100 பேரை காணவில்லை.  மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பெரிதளவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 100 பேர் காணாமல் போய் உள்ளனர். இந்த மழையில் சிக்கி … Read more

அதிகரிக்கும் உயிரிழப்புகள் : மகாராஷ்டிரா மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 169 பேர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 169 பேர் உயிரிழந்துள்ளனர், 100 பேர் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். இதுவரை பெய்துள்ள மழை வெள்ளம் … Read more

பாகிஸ்தானில் மழை, வெள்ளத்தால் 21 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மழை காரணத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கெச் பகுதியிலிருந்து சென்ற வாகனம் ஒன்று முர்க் அப் நடி என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். தகவலறிந்து … Read more

ஜெர்மனி வெள்ளப்பெருக்கில் 60 பேர் பலி..!-1,300 பேர் மாயம்..!

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,300 பேரை காணவில்லை. மேற்கு ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஜெர்மனி மற்றும் இதன் அருகில் உள்ள பெல்ஜியம், நெதர்லாந்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பல குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும் பல வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். … Read more