தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது – ராமதாஸ்.!

Tamil Nadu fishermen boat

தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை , நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இரண்டு படகுகளுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகம் அழைத்து சென்றுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் … Read more

தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

Fisherman

தமிழக மீனவர்களை மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நேற்று நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்ற்னர்.  கடந்த ஒருவாரத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட … Read more

வெளுத்து வாங்கப்போகும் மிக கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Warning to fishermen

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகத்தீவிரமாக உள்ளது.  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக … Read more

தமிழக மீனவர்கள் 21 பேர் விடுதலை.. ஒருவருக்கு 24 மாத சிறை தண்டனை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

RAMESWARAM FISHERMAN

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் தீராத பிரச்சனை என்றால் மீனவர்கள் பிரச்சனை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். ஏனென்றால், தமிழக மீனவர்களை கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், மீனவர்களின் படகுகள், வலைகளையும் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு … Read more

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம்!

Tamil Nadu fishermen

சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில், அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், நெடுந்தீவு அருகே 15 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனையடுத்து, இலங்கை கைது செய்த மீனவர்கள் 38 பேரையும், 5 படகுகளை விடுதலை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க … Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..!

Fisherman

சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், 29-ஆம் தேதி நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு … Read more

இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

M. G. Stalin Minister Jaishankar

சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில், தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், இன்று நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே, இலங்கை கைது செய்த மீனவர்கள் 37 போரையும், 5 படகுகளை விடுதலை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக … Read more

ஒரே நாளில் 37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

tnfisherman

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரே நாளில் 37 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர். சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில், தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், இன்று நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்நிலையில், இலங்கை கைது செய்த மீனவர்கள் 37 போரையும், 5 படகுகளை விடுதலை செய்ய … Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

அந்தமானுக்கு அருகே உருவாகியுள்ள காற்றுழத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை. ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மீன்வளத்துறை அறிவிப்பை அடுத்து தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு … Read more

#BREAKING: மீனவர்களுக்கு எச்சரிக்கை! டிச.20, 21 தமிழ்நாட்டில் கனமழை – வானிலை மையம்

டிச.20-ஆம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 19-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்பின் டிச.20-ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதுபோன்று டிச.21ம் … Read more