ஜனவரி 21 முதல் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு. ஜனவரி 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற … Read more

இன்று முதல் அண்ணா பல்.கழகத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நேரடி எழுத்துத் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் கேட்ட பொறியியல் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று செமஸ்டர் தேர்வுகள் டிச.13 ஆம் தேதிக்கு பதில் டிச.27 இல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும்,பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு,எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக உறுதி அளித்திருந்தது. இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் … Read more

வருகின்ற 25 ஆம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

வருகின்ற 25 ஆம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து என அனைத்துமே மூடக்கப்பட்டிருந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை குறித்து தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சில மாணவர்கள் இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாக கூறியுள்ளார். எனவே, மாணவர்களின் நலன் கருதி வருகிற … Read more

என்ஜீனியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு.! தொடங்கும் முன்பே காலியான 47,671 இடங்கள் .!

என்ஜீனியரிங் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே 47 ஆயிரத்து 671 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அவர்களில் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 15ம் தேதி முதல் தொடங்கி இந்த மாதம் 16ம் தேதி முடிவடைந்தது. அந்த வகையில் என்ஜீனியரிங் படிப்புகளில் சேர்வதற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் … Read more

பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு.!

பொறியியல் படிப்பில் சேர மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளார். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அவர்களில் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கி இந்த மாதம் 16-ஆம் தேதி முடிவடைந்தது. அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1லட்சத்து 60 ஆயிரத்து 834மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும் , அதில் 1 … Read more