மோடி கலந்து கொண்ட சாகச நிகழ்ச்சி…! 3-வது இடத்தில் டிஸ்கவரி சேனல்..!

பிரதமர் மோடியும் , பியர் கிரில்சும் இருவரும் கலந்து கொண்ட “மேன் VS வைல்டு” நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பானது. இது குறித்து டிஸ்கவரி நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறுகையில் , டிஸ்கவரி சேனல்  61 லட்சம் பார்வையாளர்களை கொண்டது. சாதாரணமாக “மேன் VS வைல்டு” நிகழ்ச்சியை 37 லட்சம் பேர் தான் அதிகபட்சமாக பார்த்து இருந்தனர்.ஆனால் மோடி கலந்துகொண்ட “மேன் VS வைல்டு” நிகழ்ச்சியை  1½ கோடி பேர் பார்த்துள்ளனர். … Read more

கடலுக்கு அடியில் 2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் , கப்பல் கண்டுபிடிப்பு !

உலகில் பழமை வாய்ந்த கலாச்சாரமாக எகிப்தின் கலாச்சாரத்தை கூறப்படுகிறது.. தற்போது உள்ள எகிப்து நாட்டில் ஹெராக்லியான் என்ற இடத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கடலுக்கு அடியில் இருந்து  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில் உடன் நகைகள் மற்றும் நாயணங்கள் உள்ள ஒரு கப்பலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதேபோல் பழங்கால கட்டிடங்கள், மண்பாண்டங்கள் போன்றவைகளும் உள்ளனர்.இவை அனைத்தும் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. … Read more

400,00,00,000 ஆண்டுகளுக்குள் முன்புள்ள பூமி பாறை சந்திரனில் கண்டுபிடிப்பு….!!

400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்த பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்சானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா விஞ்சானிகள் அப்பல்லோ திட்டத்தின் மூலம் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வருகின்றனர்.இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் மனிதர்களை சந்திராயனில் தரையிறக்கியபோது , அதாவது 1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நிலவுக்கு பயணித்து 33 மணிநேரம் வரை நிலவில் செலவிட்ட அப்போலோ 14 விண்கல விஞ்ஞானிகள், சுமார் 43 கிலோ எடை கொண்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பினர். இந்நிலையில் அந்த விண்கல்லை தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர்.இந்நிலையில் இந்த பாறை சுமார் நானூறு … Read more

மேகாலயா சுரங்கத்திற்குள் இரண்டாவது உடல் கண்டுபிடிப்பு…!!

மேகாலயா சுரங்கத்திற்குள் இரண்டாவதாக ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில் உள்ளது  லும்தாரி கிராமம்.இந்த கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த மாதம் 13–ந்தேதி திடீரென வெள்ளம் வந்து சுரங்கத்துக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சுரங்கத்திற்குள் பணியாற்றிக்கொண்டு இருந்த 15 தொழிலாளர்களும் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட வீரர்கள் கடந்த மாதத்துக்கும் மேலாக முயற்சி செய்து வந்தனர்.இந்நிலையில் 40 நாட்களுக்கு பின் அமிர் உசேன் என்ற தொழிலாளியின் … Read more