டெல்லி வன்முறை.. கைதான ஷாரூக் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் …

 டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட  மோதல் பின்னர்  வன்முறையாக மாறியது.இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில்  போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாரூக் என்ற இளைஞரை டெல்லி  போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்தனர்.  இந்நிலையில் கைதான இளைஞர் ஷாரூக் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ஷாரூக் வீட்டில் இருந்து அவர் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்களை  டெல்லி போலீஸ் கைப்பற்றினர்.

உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது

டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கு தொடர்பாக  ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டுள்ளார்.  டெல்லியில் சிஏஏ.,க்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 40-கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து தாகீர் உசைன் ஆம் ஆத்மியின் … Read more

தாகீர் உசேன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – டெல்லி கமிஷ்னர்

டெல்லியில் சிஏஏ.,க்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 40-கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக  இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர்  உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதன் விளைவாக  தாகிர் உசைன் மீது சட்டப்பிரிவு 365 மற்றும் 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து தாகீர்   உசைன் ஆம் ஆத்மியின் … Read more

தொடர் அமளி ! நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைப்பு

2 -வது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று மாநிலங்களவை வழக்கம் போல நடைபெற்றது.ஆனால்  டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் தொடர் அமளி காரணமாக நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் தொடர் அமளியால் 2 மணி வரை ஒத்தி வைப்பு..!

நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவை காலை துவங்கியதும் கேள்வி நேரம் துவங்குவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர் மக்களவை  நண்பகல் … Read more

#BREAKING : டெல்லி வன்முறையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர் கைது

டெல்லி வன்முறையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட  மோதல் பின்னர்  வன்முறையாக மாறியது.இதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ப்ரவரி மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில்  போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாரூக் என்ற இளைஞரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்தனர்.    

அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி தொடர் அமளி ! மாநிலங்களவை ஒத்திவைப்பு

மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று  பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக அமளியில் ஈடுபட்டனர் .அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.இந்நிலையில் இன்று  2-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் , நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சில முன் டெல்லி வன்முறையை  கண்டித்து  காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  

டெல்லி வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உயர்வு

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.  

டெல்லியில் வன்முறை : 18 சிறப்பு குழுக்களை அமைத்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு குழுக்கள் மூலம் உதவிகள் வழங்க நடவடிக்கை … Read more