உளவுத்துறை அதிகாரி கொலை தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது

டெல்லி உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கு தொடர்பாக  ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டுள்ளார். 

டெல்லியில் சிஏஏ.,க்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 40-கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக இருந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து தாகீர் உசைன் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

இந்நிலையில் உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கு தொடர்பாக  ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டுள்ளார்.