பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படும் ரசாயனம் உள்ளதா…!

பிரபல உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படுத்தப்படும் ரசாயனமாகிய பித்தலேட்டுகள் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் வீடுகளில் சமைத்து உண்பவர்களை விட, உணவகங்களில் வாங்கி உண்ணக் கூடிய நபர்கள் அதிகரித்து விட்டனர் என்றே கூறலாம். அதிலும் ஹோட்டல்களிலும், பெரிய பெரிய உணவகங்களிலும் துரித உணவுகளை வாங்கி உண்ண கூடியவர்கள் அதிகரித்து விட்டனர். இவ்வாறு துரித உணவுகளை வாங்கி உண்பது பாதுகாப்பானது தானா என்பது பலரும் யோசிக்க கூடிய … Read more

ஆய்வில் அதிர்ச்சி.., சில சானிடைசரால் ஏற்படும் புற்றுநோய்..!

உலகெங்கிலும் 44 சானிடைசர் கொரோனாவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக பென்சீன் எனப்படும் புற்றுநோயை உருவாக்குவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள உலக நாடுகள் மூன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், பொதுமக்கள் மாஸ்க்,  சானிடைசர் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் உலகெங்கிலும் 44 சானிடைசர் கொரோனாவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக பென்சீன் எனப்படும் புற்றுநோயை மக்களுக்கு உருவாக்குவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூ ஹேவனை தலைமையிடமாக … Read more

கோவையில் கெட்டுப்போன நிலையில் 500 கிலோ மீன்கள் பறிமுதல்..!

கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் கெட்டுப்போன 500 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் 70 கிலோ மீன்கள்  பார்மலின் தடவிய மீன்கள், 430 கிலோ கெட்டுப்போன மீன்கள்  பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை அதிகாரிகள் அங்கே அழித்தனர். கடந்த 01-ம் தேதி மதுரை கரிமேடு மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்கள் மீது ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து 20 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை … Read more

மதுரையில் டன் கணக்கில் சிக்கிய ரசாயனம் தடவிய மீன்..!

மதுரை கரிமேடு மீன் சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்கள் மீது ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.இதை தொடர்ந்து நேற்று இரவு 20 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில் கரிமேடு மீன் சந்தையில் 53 மீன் கடைகளில் பார்மாலின் என்ற ரசாயனம் கலந்த மீன் விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அந்த கடைகளில் இருந்த ரசாயனம் கலந்த 5 டன் மீன்களை பறிமுதல் செய்தனர். மேலு  பறிமுதல் செய்யப்பட்ட … Read more

மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதா!அதிகாரிகள் ஆய்வு..

மீன்களை பதப்படுத்தும் போது அதில்  ஃபார்மலின் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை உக்கடம் மீன்சந்தையில் 45 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஆனால் அவ்வாறு வேதி பொருட்கள் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.3 நாட்கள் நடத்திய சோதனைக்கு பின்பு பதப்படுத்தப்படுவதற்கு ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது அதிகாரிகளால் உறுதிசெய்யப்பட்டது.