மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதா!அதிகாரிகள் ஆய்வு..

மீன்களை பதப்படுத்தும் போது அதில்  ஃபார்மலின் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை உக்கடம் மீன்சந்தையில் 45 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஆனால் அவ்வாறு வேதி பொருட்கள் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.3 நாட்கள் நடத்திய சோதனைக்கு பின்பு பதப்படுத்தப்படுவதற்கு ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது அதிகாரிகளால் உறுதிசெய்யப்பட்டது.