#Viral: இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத குழந்தை

ஜோர்டானில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 4 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஜோர்டான் தலைநகரில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒன்பது பேர் பலியாகினர் மற்றும் சிலர் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை(செப் 14) இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து நான்கு மாத பெண் குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். தற்போது இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு ஓன்று சமூக … Read more

டெல்லியில் விரிவாக்கப் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி!

டெல்லி ஜோஹ்ரிபூரரில் விரிவாக்கப் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு டெல்லியின் ஜோஹ்ரிபூர் விரிவாக்கப் பணியின் போது வெள்ளிக்கிழமை(செப் 16) காலை புதுப்பிக்கப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “காலை 11:50 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து ஒரு போலீஸ் குழு, நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் … Read more

#GoodNews:மே 1 முதல் கட்டட அனுமதிக்கு நேரில் வர தேவையில்லை – தமிழக அரசு!

தமிழகத்தில் கட்டடம் கட்ட அனுமதி பெறுவதற்கு பொதுமக்கள் வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் நேரில் வர தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்,இதற்காக தானியங்கி ஒற்றைச் சாளர கட்டட அனுமதி முறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,கட்டட அனுமதி பெற விரும்புவோர் உரிய ஆவணங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டால் போதும் என்றும்,அதன்படி உரிய ஆவணங்களை பதிவு செய்திருந்தால் தானியங்கி முறையிலேயே அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கால தாமதம் மற்றும் … Read more

சீனாவில் 28 மணிநேரத்தில் கட்டிமுடித்த 10 மாடிக்கட்டிடம்..!

சீனாவில் 10 மாடிக்கட்டிடத்தை 28 மணி நேரத்தில் கட்டிமுடித்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஷாங்கா நகரில் 28 மணி நேரத்தில் 10 மாடிக்கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர் பிராட் குரூப் நிறுவனம். இந்நிறுவனம் இந்த கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன்னதாக கதவுகள், ஜன்னல்கள், அலமாரிகள், சமையல் அறை, சுவர்கள் என அனைத்தையும் தயார் செய்து வைத்துள்ளனர். பின்னர் கட்டுமானம் தொடங்கியவுடன் சுவர்கள், ஜன்னல்கள், கதவுகள், அலமாரிகள் என ஒன்றாக சேர்த்து வைத்து நட்டு போல்ட்டுகளை பயன்படுத்தி இறுக்கி … Read more

பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் பயணிகள் பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள தென் கிழக்கு பகுதியான குவான்ஜூ நகரில் உள்ள ஒரு சாலையில் பயணிகளை ஏற்றுவதற்காக அருகிலிருந்த பஸ் நிலையத்தில் உள்ள பேருந்து நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பஸ் நிலையம் அருகே ஒரு 5 மாடி கட்டிடம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் … Read more

மதுரையில் கட்டிடம் இடிக்கும் பணியின் போது கட்டிடம் விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

மதுரையில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது, அங்கு பணியாற்றிய வேலையாட்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர். மதுரையில்  கட்டிடம் ஒன்றை இடித்து விட்டு அவ்விடத்தில் மற்றொரு கட்டிடம் கட்டுவதற்காக பணியாட்கள் நியமிக்கப்பட்டு கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியின் போது வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. மூவர் மீது கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். … Read more

பிவாண்டி 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு…

பிவாண்டி 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு. மஹாராஷ்டிரா மாநிலம் பிவாந்தியில் உள்ள ஜிலானி என்ற 3 அடுக்குமாடி குடியிருப்பு நேற்று முன் தினம் (செப்டெம்பர் 21) அதிகாலை 3.20 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த துயர  சம்பவம் அதிகாலை நடந்தது என்பதால் அதில் வசித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளனர். இதில் விபத்து நடந்த அன்று 8 பேர் பலியாகி இருந்தனர். இடிபாடுகளில் பலர் … Read more

பாரிஸ் 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி….!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாரிஸின் எர்லாங்கர் சாலையில் 8 தளங்கள் கொண்ட கட்டிடம் உள்ளது. இங்கு நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் 7 மற்றும் 8 வது தளங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்த தளங்களில் வசித்தவர்கள் பதறியடித்து வெளியேறினர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் … Read more

புதிய நீதிமன்ற கட்டிடம் திறந்து வைப்பு …!!

புதிய நீதிமன்ற கட்டிடத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி திறந்து வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக  சுமார் 19 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் , நீதியரசர்களுக்கான குடியிருப்பு, குடும்ப நீதிமன்றம், கூடுதல் மகளிர்கள்  நீதிமன்றம் என பலவகையான புதிய கட்டிடங்களை  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி திறந்து வைத்துள்ளார். இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர்.