#BREAKING: தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்ற கோவில் நிர்வாகம்..!
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்து இருந்தது. இந்நிலையில், மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் 3-வது அலை தொற்று தடுப்பின் ஒரு அங்கமாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதல்படி … Read more