தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

Minister Ma Subramanian say About Covid 19 spread in Tamilnadu

பருவகாய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுதுவம் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 வாரங்கள் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 16,516 முகாம்கள் நடைபெற்றுள்ளன.  7,83,443 பேர் பயன்பெற்றுள்ளனர். 3772 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன . இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் நடைபெற மருத்துவ முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர். … Read more

சிறப்பு தடுப்பூசி முகாம் டிச.13ம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ma.subramaniyan

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தடுப்பூசி  முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 … Read more

தினசரி 50 பேருக்கு டெங்கு பாதிப்பு.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

Minister Ma Subramanyian

பருவகால மழை நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையால் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வாரந்தோறும் 1000 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 5வது வார மருத்துவ முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக்தில் டெங்கு பாதிப்பு, மருத்துவ முகாம்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். மருத்துவ முகாம்கள் :  அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் … Read more

சென்னை மக்கள் கவனத்திற்கு…! இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம்..!

இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்திருந்தார்.  அதன்படி இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து வழங்கப்படும்  மேலும் … Read more

சென்னை மக்கள் கவனத்திற்கு…! நாளை 200 இடங்களில் மருத்துவ முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக அறிஞர் என்று சொல்லப்படும் நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள … Read more

தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்…!

தமிழகத்தில் சென்னை உட்பட 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் காய்ச்சல்  அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீப  நாட்களாக டெங்கு, இன்புளுயன்சா போன்ற காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு – அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் : அண்ணாமலை

பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என அண்ணாமலை ட்விட்.  சமீப நாட்களாக தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. … Read more

200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர்!

200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆட்சியர் சுகன்தீப் சிங் பேடி அவர்கள் சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், அடைப்புகளை நீக்க … Read more