நாகப்பட்டினம் கடற்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு..!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடற்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேதாரண்யம் சன்னதி கடற்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மைதிட்டத்தின் கீழ் குப்பைக் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு குப்பை கிடங்கு அமைப்பதற்காக இன்று ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழிதோண்டும் பணி தொடங்கியது. இதையறிந்த கிராமமக்கள் கிடங்கு … Read more