#Breaking:சற்று முன்…இந்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 – அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு!

10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக்,ஐடிஐ செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு. 2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்தார்.அப்போது,மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி “மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்” என மாற்றப்படுகின்றது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மாதம் ரூ.1000: இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க … Read more

தமிழக பட்ஜெட்:சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்!

சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தார்.அதில், கல்வி, மருத்துவம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: குறிப்பாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வேளாண் பட்ஜெட்: இதை தொடர்ந்து,நேற்று … Read more

#Breaking:”இனி மாலையிலும் உழவர் சந்தை” – வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு!

2022-23- ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  அதில்,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இனி உழவர் சந்தைகள் மாலையிலும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.அந்த வகையில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை மாலையில் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பொதுவாக,உழவர் சந்தைகள் காலையில் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில்,மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்படவேண்டும் என்று … Read more

#Breaking:பாம்பு கடியிலிருந்து விவசாயிகள் இறப்பதை தவிர்க்க சூப்பர் திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி,பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.அந்த வகையில்,முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்தின் மூலம் 3,000 பம்பு செட்டுகள் 70 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,செல்போன் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து பம்பு செட்டுகளை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். குறிப்பாக,பம்பு செட்டுகளை இயக்க இரவு … Read more

“தாலிக்குத் தங்கம் தொடர்ந்து வேண்டும்;தொலைநோக்கு கொண்ட நிதிநிலை அறிக்கை” – விசிக தலைவர் பாராட்டு!

2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன. இந்நிலையில்,தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் தொலை நோக்கு கொண்ட நிதிநிலை அறிக்கை இது.இதை அளித்த முதலமைச்சர்,நிதி அமைச்சர்,நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியதாவது: இது வெறும் வரவு செலவு கணக்காக அல்ல: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது ஒரு சமூகநீதி … Read more

இந்தியாவிலேயே முதல் முறை – வானிலையை கணிக்க நிதியமைச்சர் அசத்தல் அறிவிப்பு!

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான காகிதமில்லா முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில், பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,தமிழ்நாட்டிற்கென வானிலையை துல்லியமாக கணிப்பதற்கு 2 வானிலை ரேடார்கள்,100 தானியங்கி வானிலை மையங்கள்,400 தானியங்கி மழைமானிகள்,11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள் வாங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மேலும்,பேரிடர் தாக்கும் முன்பே,முன்னெச்சரிக்கை வழங்குவதற்கு சூப்பர் கம்யூட்டர்(அதிவேக கணினி) உள்ளிட்ட … Read more

“திருமண உதவித் திட்டம் மாற்றம்;மகளிர் இலவச பயணத்திற்கு நிதி ஒதுக்கீடு” – நிதியமைச்சர் பிடிஆர்!

2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.அப்போது,மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி “மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்” என மாற்றப்படுகின்றது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க , அரசுப் பள்ளி மாணவியர், கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் … Read more

#BREAKING: சென்னை ஈ.சி.ஆர் 6 வழிச்சாலை- நிதியமைச்சர் அறிவிப்பு..!

நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார். ஆறு வழிச் சாலை: கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நான்கு வழி சாலையாக உள்ள சாலையை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். இதற்கு 135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார். இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 60% ஆக … Read more

#Breaking:குட்நியூஸ்…மாணவிகளுக்கு மாதம் ரூ.1000;நேரடியாக வங்கிக்கணக்கில்- நிதியமைச்சர் அறிவிப்பு!

2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில்  தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில்,அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல்  12 ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். குறிப்பாக,அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும்,அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். … Read more

#BREAKING: பேராசிரியர் அன்பழகன் பள்ளிமேம்பட்டு திட்டம்..!

நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதில்,  அடுத்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. ஐந்து ஆண்டுகளில் ரூ.7,000 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும். டாக்டர் … Read more