தொடர்ந்து நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடம்!

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராசனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக குளோபல் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சோழிங்கநல்லூரில் உள்ள அந்த மருத்துவமனையில் கடந்த 16ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் நடராசனுக்கு தீவிர மார்பக தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நடராசனை கவிஞர் வைரமுத்து நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். தம்மைப் பார்த்ததும் நடராசன் கைகளை உயர்த்தி லேசாக புன்னகைத்ததாக வைரமுத்து கூறினார்.

Leave a Comment