எதற்க்காக மோடியையும், அமித்ஷாவையும் இவர்களுடன் ஒப்பிட்டு பேசினேன்! ரஜினிகாந்த் கூறுவது என்ன?!

சமீபத்தில் சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அம்தஷாவும் கலந்துகொண்டார். அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘ மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும், அர்ஜுனனும் போன்றவர்கள். இதில் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என் அவர்களுக்கே தெரியும் என குறிப்பிட்டார்.

இந்த கருத்து இந்தியா முழுவதும்அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இதுகுறித்து சமீபத்தில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்டது. மீண்டும் அதே கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷா என இருவரும் ராஜதந்திரிகளாக  செயல்பட்டனர். அதனால் தான் கிருஷ்ணராகவும் அர்ஜுனனாகவும் ஒப்பிட்டு பேசினேன் என கூறினார்.

அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் என கூறி சென்றுவிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.