ராகுல்காந்தி நீதித்துறை குறித்து விமர்சித்தது பொறுப்பற்ற செயல் !

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் நீதித்துறை குறித்து ராகுல்காந்தி விமர்சித்தது பொறுப்பற்ற செயல் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல்காந்தி, வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் நீதிக்காக பொதுமக்களை நாடியதாக குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கு ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தமது தந்தை, தாயாரின் வழியில் காங்கிரஸ் தலைவராகியுள்ளதாகவும், தற்போது அவரது செயல்பாடுகளால் காங்கிரசின் செல்வாக்கு சரிந்து கொண்டிருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment