உள்துறை அமைச்சகம், சிலைகள் உடைப்பு சம்பவங்களைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கூறியிருந்த நிலையில், நேற்று வேலூர் அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சிலைகள் உடைப்பு சம்பவங்களை தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, சிலைகள் உடைப்பு சம்பவத்தை சகித்துக் கொள்ள கூடாது என்றும் உள்துறை அமைச்சரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், சிலைகள் உடைப்புச் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சிலைகளை உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், சிலைகளை உடைப்பவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.