ஜெயலலிதா உயிரிழப்புக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம் -முதலமைச்சர் பழனிசாமி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி முன்னீர்பள்ளத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், வாக்களித்த மக்களை நினைக்காமல், பதவிக்கு ஆசைப்பட்டு மக்களுக்கு துரோகம் செய்ததால் இந்த தேர்தலை சந்திக்கிறோம்.காங்கிரஸ் கட்சியால்தான் இந்த தேர்தல் நடக்கிறது, தேர்தலில் காங்கிரஸ்  கட்சிக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.
ஜெயலலிதா உயிரிழப்புக்கு ப.சிதம்பரமும் ஒரு காரணம், ஜெயலலிதா ஆன்மா சும்மாவிடாததால் இன்று அவர் சிறையில் உள்ளார்.ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு கருணாநிதியும், ஸ்டாலினும்தான் காரணம் என்று தெரிவித்தார்.