பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்த மோடி….!!

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு வந்தார்.

அப்போது திருப்பூர் பெருமாநல்லூர்_ரில்  நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட மோடி காணொலி காட்சி மூலம் பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைத்தார் திருப்பூர் E.S.I மருத்துவமனை_க்கு அடிக்கல் நாட்டிய மோடி , சென்னை கேகே நகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை  நாட்டுக்கு அர்ப்பணித்தார் .

மேலும் பிரமர் மோடி திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் நவீனமயமான விரிவாக்கப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். சென்னை தேனாம்பேட்டை D.M.S முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முதல்வர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சபாநாயகர் தனபால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment