சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் மூன்று ஆண்களின் புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தனது வாழ்வில் முக்கியமான ஆண்கள் என்று குறிப்பிட்டு, முதலாவதாக தனது தந்தை ரஜினி, இரண்டாவதாக தனது மகன், மூன்றாவதாக தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும் விசாகன் ஆகிய மூவரை புகைப்படங்களை பதிவிட்டு, நெகிழ்ச்சியான வார்த்தைகளையும் அதில் பதிவிட்டுள்ளார்.