மக்கள் இடத்தில் வரவேற்பை பெற்ற பீட்சா, ஜிகர்தண்டா என தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் தற்போது வரை வெற்றிநடைப்போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் சமீபத்திய அவர் ஒரு பேட்டியில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து எந்த கதைக்களத்தை வைத்து இய்க்குவீர்கள் என்று கேட்ட போது விஜய்யுடன் இணைந்தால் என்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு கேங்க்ஸ்டர் மாதிரியான படம் தான் பண்ணுவேன் என்றார்.நடிகர் அஜித்துடன் இணைந்தால் என்ற கேள்விக்கு அவரை வைத்து காமெடி படம் தான் என்று கார்த்திக் சுப்புராஜ் கூலாக கூறினார்.