மாடி வீட்டிலிருந்து மக்களைப் பார்க்கும் கமல்ஹாசனுக்கு ஏழை, எளிய மக்களின் பிரச்சனை புரியாது!

கமல்ஹாசன் தற்போது ட்விட்டர் மூலம் ஆளும் அதிமுக மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறி வருகிறார்.அதேபோல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்ப்பாக கருத்து தெரிவித்திருந்தார் .எனவே அவர் கருத்துக்கு பதில் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.மாடி வீட்டிலிருந்து மக்களைப் பார்க்கும் கமல்ஹாசனால் குடிசைகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக கமல்ஹாசன் விமர்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
source: dinasuvadu.com

Leave a Comment