புயல் பாதிப்பில், அரசியல் கட்சியினர் அரசியல் செய்யாமல், களத்தில் இறங்கி உதவி செய்ய வேண்டும்…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை வேண்டுகோள்

புயல் பாதிப்பில், அரசியல் கட்சியினர் அரசியல் செய்யாமல், களத்தில் இறங்கி உதவி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை தி நகரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், கஜா பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவது சிறிது காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். தமிழக பா.ஜ.க. சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டு, பாதிப்பு குறித்த அறிக்கை ஒன்று தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும். புயல் பாதிப்பில், அரசியல் கட்சியினர் அரசியல் செய்யாமல், களத்தில் இறங்கி உதவி செய்ய வேண்டும்.மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று சென்னை இளைஞர்கள் உதவ வேண்டும் என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment