சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி செய்தியாளர்.!

சென்னை தாம்பரத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள புதுநல்லுரை சேர்ந்தவர் மோசஸ் .இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்தார் . இவரை ஒரு சில கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இவரது வீட்டின் முன்பு வந்த மூன்று பேர் தொலைப்பேசி எண்ணை கேட்டுள்ளனர் . அதனையடுத்து அந்த மூன்று பேரும் … Read more

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவை தெரிவித்திருந்தது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி … Read more

உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை திட்டிய கணவன் – தற்கொலை செய்துகொண்ட மனைவி!

உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை கணவன் திட்டியதால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜயநகரில் ப்ளம்பராக பணிபுரியக்கூடியவர் தான் மணிகண்டன். இவர் அபிராமி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நேற்று அபிராமி உணவு சமைக்க தாமதமானதால் மணிகண்டன் திட்டியுள்ளார். இதனால் அபிராமி மனமுடைந்துள்ளார். இந்நிலையில், அடுப்பாங்கரைக்கு சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி … Read more

கொரோனா உறுதி : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவின் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலும் அரசு ஊழியர்களும், முன்களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களும் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கின்றனர். இந்நிலையில், தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி  ஏ.பி.சாஹி அவர்களுக்கு தற்பொழுது கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நல குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நீதிபதி  ஏ.பி.சாஹி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா … Read more

#Breaking: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,757 சிறப்பு பேருந்துகள் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நவம்பர் 11ஆம் தேதி முதல், சென்னையில் உள்ள 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும், 14,757 பேருந்துகள் சென்னையிலிருந்து தீபாவளியை முன்னிட்டு இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார் . பேருந்து முன்பதிவிற்கு சென்னையில் 13 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், 27,000 … Read more

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது!

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதியவர்கள் என வயது வித்தியாசமே பார்க்காமல் பலாத்காரம் செய்ய துணியும் கொடூரர்கள் அதிகரித்து விட்டார்கள். இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தங்களின் மூன்று வயது பெண் குழந்தையுடன் சென்னை ஆம்பத்தூர் பத்தரவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள சாலையோரத்தில்வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளன் மற்றும் சுபாஷ் ஆகிய இரு இளஞர்கள் பயிற்சி டிப்ளமோ … Read more

பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பயணிகளின் வசதிக்காக இன்று முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, நவராத்திரி விழாவை கொண்டாடி விட்டு தங்கள் ஊர்களுக்கு திரும்புபவர்களின் வசதிக்காக வழக்கமாக காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயிலை காலை 5.30 மணிக்கு … Read more

விடிய விடிய பெய்த கனமழையால் கடல் போல காட்சி தரும் சென்னை அண்ணா சாலை!

விடிய விடிய பெய்த கனமழையால் கடல் போல காட்சி தரும் சென்னை அண்ணா சாலை, மக்கள் அவதி. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு … Read more

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சென்னை இளைஞர். கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை வைத்து சூது போல ஆடும் விளையாட்டுகள் அதிகரித்து விட்டது. அதிலும், தற்பொழுது ஆன்லைனில் ரம்மி விளையாடி அதில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மனா உளைச்சலுக்கு ஆளாகி தங்கள் உயிரை மாய்த்துகொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள செம்பி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய குமரேசன் எனும் இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். எனவே அதில் … Read more

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் 27 வயதான மணிகண்டன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வைத்து 17 வயது இளைஞன் வசந்த் என்பவரை கொலை செய்து குற்றவாளியாக சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் ஏரியாவில் தான்தான் பெரிய ஆள் … Read more