சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி செய்தியாளர்.!

சென்னை தாம்பரத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள புதுநல்லுரை சேர்ந்தவர் மோசஸ் .இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்தார் . இவரை ஒரு சில கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இவரது வீட்டின் முன்பு வந்த மூன்று பேர் தொலைப்பேசி எண்ணை கேட்டுள்ளனர் . அதனையடுத்து அந்த மூன்று பேரும் பேச்சை கொடுத்தவாறே மோசஸ் அவர்களை தூரமாக அழைத்து சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர் .

மோசஸ் அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்துள்ளார் . உடனடியாக வெட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் . தலை மற்றும் கைகளுடன் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மோசஸ் அவர்களை உடனடியாக அருகிலுள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றனர் . ஆனால் மோசஸ் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் மகனை வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்த அவரது தந்தை , அதே பகுதியில் உள்ள ரவுடி நவமணி தான் தனது மகன் மோசஸின் கொலைக்கு காரணம் என்று சந்தேகமாக இருப்பதாகவும் , ஏனெனில் மோசஸ் அவர்கள் புதுநல்லூர் பகுதியில் நடந்து வந்த குற்றங்களை சுட்டி காட்டி அதனை செய்தியாக்கி அம்பலப்படுத்தினார் . அதனால் கோபமடைந்த நவமணி தனது மகனை கொலை செய்வதாக மிரட்டி வந்ததாக மோசஸின் தந்தை புகாரில் கூறியுள்ளார் . தற்போது மோசஸ் அவர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.