Breaking news:நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து…!

நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருவள்ளுவர் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பில் , நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.நாளை நடைபெறவிருந்த தேர்வு வருகின்ற  24 ஆம் தேதிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment