BREAKING NEWS:காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படும்!காவிரி வழக்கில் அனைத்துதரப்பு வாதம் முடிந்தது!இனி என்ன நடக்கும்?

காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படும் என்று  திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தில்  அறிவிக்கபட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

Related image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் நாளை அல்லது மே 22ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கில் அனைத்துதரப்பு வாதம் முடிந்தது; இனி எந்ததரப்பு வாதமும் ஏற்கப்படாது என்று  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் மீதான வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு தீர்ப்பு நாளை தீர்ப்பு வழங்காவிடில் மே 22 அல்லது 23 ஆம் தேதிகளில் தீர்ப்பளிக்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் பிரச்னை வந்தால் அதை சரி செய்ய ஆணையத்துக்கே அதிகாரம் உள்ளது .உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தில் அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு  தாக்கல்:

Image result for மத்திய அரசு

காவிரி அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்று பெயர் சூட்டப்படும் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு குழு தொடர்பான திருத்தப்பட்ட வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

காவிரி அமைப்புக்கு ஆணையம் என்று பெயர் மாற்றி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தது மத்திய அரசு. “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” என்று திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படலாம் என மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு 2 பக்க அறிக்கை தாக்கல்:

Image result for கர்நாடக அரசு

மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை.மேலும் மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு 2 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணை விவரம்: 

Related image

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அணைகளில் நீர் திறக்கும் அதிகாரம் காவிரி அமைப்பிடமே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு, மேலும் காவிரி அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவுக்கு பதில் டெல்லியில் அமைக்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

Image result for காவிரி வழக்கு

இந்நிலையில்  காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயர் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது . காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் சூட்ட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கபட்டது. காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படும் என்று  திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தில்  அறிவிக்கபட்டுள்ளது. இதனை ஏற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவிரி வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மாநில அரசுகளின் கருத்துக்கு மத்திய அரசு நாளை பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment