பேனர்கள் வைப்பதை முழுமையாக விர்த்திட வேண்டும்…! மு.க.ஸ்டாலின் 

பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில்  டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க  தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் பதிவில், பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை திமுகவினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment