தேர்வுக்கு முன்கூட்டியே வெளியான வினாத்தாள்…!பொறியியல் பட்டதாரிகள் இருவர் கைது…! சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணை..!

அண்ணா பல்கலைக் கழக தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது.டிசம்பர் 3 ஆம் தேதி  முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நடைபெற்றது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது .
Image result for அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
பின்  வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததால் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக கணிதத் தேர்வு ரத்து செய்தது.  தேர்வு மீண்டும் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. மரைன் பொறியியல் மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் டிசம்பர் 12 ஆம் தேதி மறுதேர்வை எழுத வேண்டும் என்றும் தெரிவித்தது.தொடர்ந்து அன்று தேர்வு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொறியியல் பட்டதாரிகள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment