கஜா புயல் சீரமைப்புக்கு பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் …! தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவ

கஜா புயல் சீரமைப்புக்கு பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறுகையில், தமிழக அரசு கடிதம் எழுதவில்லை என்றால், தேர்தல் ஆணையமே கருத்து கேட்கும் .இடைத்தேர்தல் தொடர்பாக பதிலளிக்க 24 மணிநேரம் கால அவகாசம் தமிழக அரசுக்கு வழங்கப்படும்.புயல் காரணமாக 20 தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தால் அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் .கஜா புயல் சீரமைப்புக்கு பின்னரே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும்  தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment