கஜா புயலால் 1.13 லட்சம் மின்கம்பங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளது…!அமைச்சர் தங்கமணி

நிவாரண பணிகளில் அரசு சிறப்பாக செயல்பட்டது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  கஜா புயலால் 1.13 லட்சம் மின்கம்பங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளது.நகர்ப்புறங்களில் 90 சதவீதமும், கிராமப்புறங்களில் 35 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது.நிவாரண பணிகளில் அரசு சிறப்பாக செயல்பட்டது மக்களுக்கு நன்றாக தெரியும், எனவே திருவாரூர் இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றும்  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment