உத்தரகாண்டில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானை பலி!

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் அருகே, ராஜாஜி புலிகள் காப்பகம் பகுதியில் ரயில் மோதி பலியானது.

17 யானைகள் கூட்டத்துடன் அந்தப் பெண் யானை தண்டவாளத்தைக் கடந்த போது டோராடூனில் இருந்து ஹரித்துவார் நோக்கி வேகமாக வந்த விரைவு ரயில் இந்தப் பெண் யானை மீது மோதி விபத்து நேரிட்டதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் அடிக்கடி ரயில் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment