#Breaking:புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – இன்றும்,நாளையும் அரை நாட்கள் மட்டுமே இயங்குமா?..!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 23,2022 முதல் திறக்கப்படும் என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.அதன்படி,1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.இதனால்,கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அனுமதிக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும்,இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் இன்றும்,நாளையும் அரை நாட்கள் மட்டுமே இயங்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment