#Breaking:உஷாரா இருங்க…ஒரே நாளில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா;38 பேர் பலி!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 12,249 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 13,313 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,44,958 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • மேலும்,கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 13 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,941 ஆக பதிவாகியுள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 10,972 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,27,36,027 ஆக பதிவாகியுள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 83,990 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 1,96,62,11,973 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும்,இந்தியாவில் ஒரே நாளில் 14,91,941 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment