சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு : தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வு மையம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது.

மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி, மதுரை மாவட்டம் சித்தாம்பட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகாசி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment