பி.சி.சிஐ. நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத்ராய், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் மூத்த வீரர் தோனி இடையிலான தோழமை உணர்ச்சி வியப்பளிப்பதாக, தெரிவித்துள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இரு வீரர்களும் ஒருவர் மீது மற்றவர் பரஸ்பரம் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், மகேந்திரசிங் தோனிக்கு மாற்று இல்லை என பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவில் விராட் கோலி கூறியதாகவும் வினோத் ராய் நினைவு கூர்ந்துள்ளார்.
போட்டியின் போக்கை கணிக்கும் தோனியின் திறனை இந்திய அணியின் சொத்தாக கருதும் விராட், விக்கெட் கீப்பிங் செய்வதிலும் தோனியின் வேகத்தை விஞ்சும் வீரர் இல்லை என கருதுவதாக வினோத் ராய் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.