வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு ஒருமுறை கூட நிரூபிக்கபடவில்லை…. தலைமை தேர்தல் ஆணையர் கருத்து…!!

நாடாளுமன்றம் , சட்டமன்றம் தேர்தல் ஏற்பாடு பற்றி ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.அப்போது அவர் அங்கே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து இருப்பதாகவும் , வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஒரு தடவை கூட நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளை நிபுணர்கள் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார் யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியும் வகையில் ஒப்புகை சீட்டு வாக்கு எண்ணிக்கையின்போது என்ன வேண்டும் என்றும் சில கட்சிகள் கோரிக்கை விடுத்திருப்பதாக இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்
author avatar
Dinasuvadu desk

Leave a Comment