” மத்திய அரசை அகற்ற வேண்டியது நம் கடமை ” M.P கனிமொழி கருத்து…!!

டெல்லியில் உள்ள ஜந்தர் மாந்தர் பகுதியில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மத்திய பிஜேபி அரசை கண்டித்து போராட்டம் நடத்தினார்.நேற்றைய தினம் ஆந்திர மாநில முதலவர் சந்திரபாபு நாயிடு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி போராட்டம் நடத்திய நிலையில் இன்று அரவிந்த கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார்.
இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டனர்.இதில் கலந்து கொண்ட திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ,மத்திய அரசு பல்வேறு விதமான ஜனநாயக விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை  அகற்ற வேண்டும் என்பது இந்திய மக்களின் கடமை என்றும் கனிமொழி  கூறியிருக்கிறார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment