2019 நாடாளுமன்ற தேர்தல்: அனைத்து தொகுதிகளிலும்  தேமுதிக போட்டி …!விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு

அனைத்து தொகுதிகளிலும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்  போட்டியிட இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மக்களுக்கு உதவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும். லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கும் பாதையில் தேமுதிக பயணித்துக் கொண்டிருப்பதாகவும், எதிர்கால பிரச்னைகளை தீர்க்கும் முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் .
தமிழக மக்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Leave a Comment