கேரளாவில் வீடுகளுக்கு செல்பவர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.16,000 …!கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவு

நிவாரண முகாம்களிலிருந்து வீடுகளுக்கு செல்பவர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.16,000 செலுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 324 -க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகியும் உள்ளனர்.
மேலும்  கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகின்றது.
Image result for kerala cm
இந்நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து வீடுகளுக்கு செல்பவர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.16,000 செலுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே சென்றவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment